மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பிரதான அலுவலகம் இலக்கம் 25, மாளிகாவ வீதி, இரத்மலானை எனும் இடத்தில் அமைந்துள்ளதுடன், அதன் தொழிற்பாடுகளை நிறைவேற்றுவதற்காக களுத்துறை, கொழும்பு மற்றும் கம்பஹ ஆகிய மாவட்டங்களில் 03 அலுவலகங்கள் நிறுவப்பட்டுள்ளன.

தற்போதைய மாகாண நீர்ப்பாசனத் திணைக்களம் 1992 ஆம் ஆண்டில் மேல் மாகாணத்தின் சிறிய நீர்ப்பாசனத் தொழிற்பாடுகளை மேற்கொள்வதற்காக மேல் மாகாண பொறியியற் செயலணியின் ஒரு பிரிவாக தாபிக்கப்பட்டது. பின்னர் இது 2005.01.01 ஆம் திகதி முதல் செயற்படும் விதமாக A தரத்திற்குரிய திணைக்களமாக 2006.12.08 ஆம் தேதியிட்ட வர்த்தமானி பத்திரிகையூடாக தரப்படுத்தப்பட்டதுடன் 2012 ஆம் ஆண்டில் மேல் மாகாண விவசாய, காணி, நீர்ப்பாசன, மீன்பிடி, விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதார மற்றும் கமநல அபிவிருத்தி தொடர்பான அமைச்சின் கீழ்க் கொண்டு வரப்பட்டது.

இத்திணைக்களத்தின் தொழிற்பாடுகளை மேற்கொள்வதற்குரிய சட்டங்களை கூட்டிணைப்பதற்கான நியதிச் சட்டம் (இலக்கம் 1888/42) 2014.11.14 ஆம் தேதியிட்ட வர்த்தமானி பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.

விஷன்:

"உரிய காலத்தில் விவசாயத்திற்கான நீர்."

மிஷன்:

"அதை பராமரிக்க மற்றும் துறை தாங்கிப்பிடிக்கும் உறுதி போது மக்கள் அதிகபட்ச நன்மைகளை உகந்த வேளாண்மை உற்பத்தித்திறன் நோக்கி நவீன தொழில்நுட்பம் மற்றும் பிற ஆதாரங்கள் மூலம், நீர்ப்பாசன முறை புனர்நிர்மாணம் கட்டும் திட்டமிடல் மூலம் நிலம் மற்றும் நீர் தான் பயன்படுத்தி மேல் மாகாணம் நீர்ப்பாசன துறை விருத்தி."

நிறுவன கட்டமைப்பு

மேல் மாகாணத்தில் அமைந்துள்ள சிறு நீர்ப்பாசனத் தொகுதிகளை அபிவிருத்தி செய்வதற்குரிய சேவைகளை வழங்கும் “A” தரத்திற்குரிய திணைக்களமாகிய மேல் மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தின் விடயங்களை நிர்வகித்தல் மற்றும் நடைமுறைப்படுத்தும் பொறுப்பு மேல் மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இலங்கை பொறியியல் சேவையின் 1-ஆம் தர அலுவலர் ஒருவர் மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளராக நியமிக்கப்படுவதோடு மாகாண நீர்ப்பாசன விடயப் பொறுப்பு செயலாளரின் மேற்பார்வையின் கீழ் மேல் மாகாண சிறு நீர்ப்பாசன நியதிச் சட்டத்தின் ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்குரிய அதிகாரம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நியதிச் சட்டத்தின் விடயங்களை நடைமுறைப் படுத்துவதற்கு மேல் மாகாணத்தின் 03 மாவட்டங்களிற்காகவும் தனியான மாவட்டப் பொறியியலாளர் அலுவலகங்கள் 03 நிறுவப்பட்டு அவற்றிற்கான நிறுவனத் தலைவர்களாக மாவட்ட நீர்ப்பாசனப் பொறியியலாளர்கள் மூவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு மேலதிகமாக பிரதான அலுவலகத்திற்கு இணைப்புச் செய்யப்பட்டுள்ள தலைமையகப் பொறியியலாளரினால் திணைக்களத்தின் அனைத்து கடமைகளும் வழிநடாத்தப்படுகின்றது. மேலும், திணைக்களத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள செலவுத் தலைப்பின் கீழ் மேற்கொள்ளப்படும் அனைத்து நிதி நடவடிக்கைகளும் திணைக்கள கணக்காளரது மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றது. இவ்வாறு மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளரது மேற்பார்வை மற்றும் விதப்புரைகளின் கீழ் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள அதிகாரம், காரியங்கள் மற்றும் பணிகள் நிறைவேற்றப்படுகின்றன.

நிறுவன விளக்கப்படம்

Organization Chart